என்
வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சிகளில் ஒன்று டிசம்பர் 7 ஆம் தேதி
திருநெல்வேலியில் நடந்தது. இதற்கு முழுக் காரணம், முனைவர் திரு. செளந்தர
மகாதேவன் அவர்கள். சிரமம், செலவு என்று எதையும் பொருட்படுத்தாமல் அவர் என்
மீது உள்ள நேசம் என்னவென்று காட்டினார்.
கடைசி நிமிடத்தில் ஏற்பாடு; ஊடகங்களின் எதிர்பாராத ஏகோபித்த ஆதரவு. இவையாவுமே அவர்
சரி, நிகழ்ச்சி என்ன?
திருநெல்வேலியில் பாரதியார் படித்த வகுப்பறை! அப்புறம் நிகழ்ச்சியைப் பற்றி அளப்பானேன்! அந்தப் பள்ளியில்தான் வ.உ.சி., புதுமைப்பித்தன் போன்றோரும் படித்தார்கள்.
அழகுப் பதுமைகளாகசி சின்னஞ் சிறுமிகள்
அந்தப் பழைய கால பெஞ்சுகளில் வீற்றிருந்தார்கள். பள்ளியின் மாணவராக இருந்து
தாளாளராக ஆன திரு. செல்லையா, சுறுசுறுப்பான திரு, சொக்கலிங்கம்,
தலைமயாசிரியர் திரு. அழகு சுந்தரம், நண்பர் திரு. சுந்தர்ஜி,
எல்லாவற்றுக்கும் மேலாக, வாஞ்சையே வடிவான வண்ணதாசன் என்னும் எங்கள்
அபிமானத்திர்குரிய கல்யாண்ஜி, எல்லோரும் வந்திருந்தார்கள்.
திரு, செளந்தர மகாதேவன் அழகான வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
நான் குழந்தைகளோடு ஐக்கியமாகிப் பாடினேன், அவர்களும் என்னுடன் சேர்ந்து பாடினார்கள். எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்போம் என்னும் உறுதிமொழியை அவர்களிடமிருந்து வாங்கவேண்டும் என்பதற்காக, நான் இம்புட்டுத் தொலவிலெந்து வந்திருக்கேன், எனக்கு என்ன கொடுப்பீய? என்று கேட்டேன்.
ஒரு சிறுமி, தலையைச் சாய்த்தபடி, ‘அதான், எங்க சிரிப்பை அள்ளி அள்ளித் தாரோமே!’ என்றாள். சிறுமியின் வார்த்தையா அது! பராசக்தியின் வார்த்தை! சரி, என்ன பெரிதாய் வித்தியாசம் என்கிறீர்களா, அதுவும் சரிதான்!
என்னுடன்,
அமரர் திரு. எஸ். பாலசந்தர் அவர்களின் பெயரனான திரு. பரத்வாஜ் ராமனை
அழைத்துச் சென்றிருந்தேன். அவருக்குப் பக்கத் துணையாக கும்பகோணம் திரு,
சுவாமிநாதன் மிருதங்கம்.
‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ ‘தீராத
விளையாட்டுப் பிள்ளை’ ‘சின்னஞ் சிறு கிளியெ’ என்னும் பாரதி பாடல்களின்
நயத்தை நான் விளக்கிச் சொல்ல, பரத்வாஜ் அருமையாக வாசித்தார்.
குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை எல்லோரும் ரசித்தார்கள்.
மதிய உணவு மட்டுமல்ல, நேற்று இரவு, ரயிலில் உணவும் மகாதேவப் பிரசாதம்தான்!
அவர் சொன்னபடி,
பாரதியின் பிறந்தநாளை வெகு அழகாக, நெகிழ்ச்சியுடன் கொண்டாடிவிட்டோம்!
அன்புடன்,
ரமணன்
(4 photos)சரி, நிகழ்ச்சி என்ன?
திருநெல்வேலியில் பாரதியார் படித்த வகுப்பறை! அப்புறம் நிகழ்ச்சியைப் பற்றி அளப்பானேன்! அந்தப் பள்ளியில்தான் வ.உ.சி., புதுமைப்பித்தன் போன்றோரும் படித்தார்கள்.
திரு, செளந்தர மகாதேவன் அழகான வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
நான் குழந்தைகளோடு ஐக்கியமாகிப் பாடினேன், அவர்களும் என்னுடன் சேர்ந்து பாடினார்கள். எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்போம் என்னும் உறுதிமொழியை அவர்களிடமிருந்து வாங்கவேண்டும் என்பதற்காக, நான் இம்புட்டுத் தொலவிலெந்து வந்திருக்கேன், எனக்கு என்ன கொடுப்பீய? என்று கேட்டேன்.
ஒரு சிறுமி, தலையைச் சாய்த்தபடி, ‘அதான், எங்க சிரிப்பை அள்ளி அள்ளித் தாரோமே!’ என்றாள். சிறுமியின் வார்த்தையா அது! பராசக்தியின் வார்த்தை! சரி, என்ன பெரிதாய் வித்தியாசம் என்கிறீர்களா, அதுவும் சரிதான்!
மதிய உணவு மட்டுமல்ல, நேற்று இரவு, ரயிலில் உணவும் மகாதேவப் பிரசாதம்தான்!
அவர் சொன்னபடி,
பாரதியின் பிறந்தநாளை வெகு அழகாக, நெகிழ்ச்சியுடன் கொண்டாடிவிட்டோம்!
அன்புடன்,
ரமணன்
No comments:
Post a Comment